
“நீ யாருன்னு என்னக்கு தெரியாதா?”
“அவன் என்ன யோக்கியமா”
“ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேச்சுதான்”
“வாய் ரொம்ப நீளம்”
“அது ஒரே நாறவாய்”
“ஒன்னும் பண்ண மாட்டான்…பேச்சு மட்டும் தான் ”
“என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு பேசுப்பா”
“சம்பந்தம் இல்லாத விஷயத்துல தலையை நுழைக்கிறான்”
“போட்டு சாத்தப் போறாங்க பாரு”
இன்னும் பிற இந்தியாதி இந்தியாதிகள் …
சமூக வலை தளங்கள் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.
நேத்து அஸ்வின் CSK பத்தி பேசுனா ஒரு உதாரணத்துக்கு ஊரே அவரை கழுவி கழுவி ஊத்திருச்சு…மிகுதியான நெட்டிசன்கள் இப்பொழுது கழுவி ஊத்தருதல ரொம்ப சிறப்பா செயல்படுறாங்க. ரொம்ப மகிழ்ச்சி.
ஆனா பேசுறதை அப்படியே பண்றது எவ்வளவு கடினம்னு யாரும் யோசிச்சு பேசுற மாதிரி தெரியல.
கமல் அரசியல் பேசுறாரா…..
“அரசியல்” பேசுனா என்ன தப்பு …
“அவரு பார்ப்பான்”
“அவருக்கு பொண்ணுங்க weakness”
“புரியுற மாதிரி எப்போதும் பேசுறது இல்ல”
“தனக்கு ஒண்ணுன்னா மட்டும் பேசுறாரு”
“அவருக்கு அரசியல் தெரியுமா”
கேள்விகள் மிக மிக அதிகம் …
சில கேள்விகளில் எனக்கும் உடன்பாடு உண்டு ..
சில கேள்விகள் உண்மை …
சில கேள்விகளின் உண்மைத் தன்மையில் குறை உண்டு…
கமலிடம் எனக்கு நிறைய முரண்பாடுகள் உண்டு. அவரின் அரிதாரத்தையும் தொழில் பக்தியையும் கண்டு இன்னும் வியப்பவன் நான்…
ஆனால் அரசை நோக்கிய கேள்விகளை நான் மிகவும் ரசிக்கிறேன். மிகவும் தெளிவான வார்த்தைகள்.
தேர்ந்தெடுத்த அழகிய நடை. மரியாதையான சொற்கள். சரியான “Call to Action”…
கொஞ்சம் பதறி தான் போயிருக்கிறார்கள் அரசைச் சார்ந்தவர்கள் (மத்திய மாநில அரசுகள் இரண்டும்).
போயஸ் தோட்டத்து “புத்தர்” பேச வேண்டிய எதிர்கால அறிக்கைகள் இப்பொழுது ஆழ்வார் பேட்டை “ஆண்டவரால்” பேசப்பட்டது பலரையும் திகைப்படையச் செய்தது உண்மைதான். அவர்களுடைய திட்டத்தில் இந்தத் திருப்பம் எதிர்பாரதது.
நம் ஆளுங்க ஒரு புத்திசாலித்தனமான கேள்வி ஒன்ன கேட்குறாங்க….
“அந்தம்மா இருந்த இவருக்கு இவ்வளவு தைரியம் வருமா?”
ரொம்பச் சரியான கேள்வி ….
அந்தம்மா இந்திருந்தா …சின்னம்மா இல்லை …இப்போ நாட்டாமை பண்ற யாரும் சத்தமா தும்மின்னது கூட இல்லை …NEET இருந்திருக்காது … GST வந்துருக்காது ….
எல்லாத்துக்கும் ஒரே மையம்.
“அம்மா” மற்றும் “அய்யா” திடமாக அரசியல் செயல் நிலை இருந்திருந்தால் எல்லாம் வேறு தளத்தில் இயங்கி இருக்கும் என்பது நிச்சயம் உண்மை. அதில் நான் உடன்படுகிறேன். ஆனால் இன்று அந்த நிலை இல்லை.
காரண காரியங்கள், சூழ்நிலைகள், நேரம் காலம் சார்ந்துதான் எல்லா இயக்கங்களும் எழுந்துள்ளன.
கமல் கேள்வி என் கேட்கிறார் …என்பது விடுத்து…அவரின் கருத்துக்களையும் கேள்விகளையும் சற்றே ஆராயுங்கள் …
அந்தக் கருத்துக்களிலும் கேள்விகளிலும் பல்வேறு சுயநலம் இருக்கலாம் …
கடந்த காலத்தின் கசப்பு உணர்வுகளின் சுவை தெரியலாம் …
மிகப் பெரிய கட்சியின் “செயல் தலைவர்” கொடுத்த தைரியமும் இருக்கலாம் …
ஆனால் “உண்மை” இல்லை என்று யாராவது கூற முடியுமா….
மோகன் தாஸ் கரம்சந் என்கின்ற ஒரு சாதாரண குடும்ப மனிதன், “மகாத்மா” வாக உயர்ந்தது ஒரு சிறு புகைவண்டி நிலைய நிகழ்ச்சியின் பொறியில் தான் என்பதை நாம் மறக்க வேண்டாம். சற்றே நோக்கினால் “சுயநலம்” நிச்சயம் உண்டு…..காலத்தின் கைவண்ணம் அதுவே நம் தேசத்தின் “துருவ நட்சத்திரமாய்” ஒளிர்ந்தது…
கமலின் நிலைப்பாடும் “கோமகனா” இல்லை “கோமாளியா” என்பதை காலமும் மக்களும் முடிவு செய்வார்.
மீண்டும்…
எனக்கு கமலிடம் நிறைய முரண்பாடுகள் உண்டு. அவரின் அரிதாரத்தையும் தொழில் பக்தியையும் கண்டு இன்னும் வியப்பவன் நான்…
அவரின் இன்றைய நிலைப்பாடுகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்…