“ஊழல் எதிர்ப்புவாதியான அன்னா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்ட நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தார். அவர், கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையே, நேற்று டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், டில்லி சட்டசபை தேர்தலுக்கான, கட்சியின் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.”
-செய்தி நன்றி தினமலர்
டில்லி சட்டசபை தேர்தல், பா.ஜ., தரப்பில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் ஐ .பி.எஸ்., அதிகாரியான கிரண்பேடியை அறிவித்ததால் இந்த தேர்தல் மேலும் படு சூடு பிடித்துள்ளது. அன்னா ஹசாரேயிடம் அரசியல் பாடம் பயின்றவர்கள் கிரண்பேடி மற்றும் கெஜ்ரிவால்.
கிரண்பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் நான் அறிய முற்பட்டது இவை:
1) பா.ஜ தொண்டர்களில் இருந்து ஒரு முதல்வர் வேட்பாளரை இனம்காண முடியவில்லை
2) கெஜ்ரிவால் போன்ற clean political image பா.ஜவுக்கு டெல்லியில் தேவைபடுகிறது
3) கெஜ்ரிவால் & கிரண்பேடி இருவரும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளை விமர்சித்து வந்தவர்கள், சந்தர்பங்களில் இந்த கட்சிகளின் உதவியினை மற்றும் அதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர் .
4) டில்லி சட்டசபை தேர்தல் – கிருஷ்ணாநகர் தொகுதியில் கெஜ்ரிவால் & கிரண்பேடி இருவரும் நேருக்கு நேர் களம் காண்கிறார்கள். இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் நேராக களம் செல்வது இது முதல் முறை என எண்ணுகிறேன்.
5) “கிரண்பேடியுடன் நான் நேரடி விவாதம் நடத்த விரும்புகிறேன். இதற்கு அவர் தயாரா” – கெஜ்ரிவால்
“வரவிருக்கும் புது சட்டசபையில் நேருக்கு நேர் விவாதித்து ஆக்கப்பூர்வ பணியாற்றுவோம்” – கிரண்பேடி
ரெண்டு civil services officersசும் நிலைமையை தங்கள் வார்த்தைகளில் நன்றாகக் கையாளுகிறார்கள். [ SHE wants HIM to be part of new legislature 🙂 ]
6) மாறுபட்ட, படித்த, மக்களுக்கு பரிட்சயமான முகம் எல்லா கட்சிகளுக்கும் தேவைபடுகிறது.
7) கிரண்பேடி எதற்காக பிஜேபி யுடன் சேர்ந்தார், அன்னா ஹசாரேயிடம் ஆலோசனை பெற்றாரா, மோடி அரசின் மற்றும் பிஜேபியின் எந்த கொள்கை அவருக்கு பிடித்தது? டெல்லிக்கு என்ன என்ன திட்டங்கள் அவர் வைத்திருக்கிறார், அதை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவார், டில்லி சட்டசபை தேர்தல் நேரம் ஏன்? …million dollor questions ….
8) காங்கிரஸ் கட்சியின் சார்பில் எந்தக் கருத்தும் சொல்லப் படவில்லை…ஒருவேளை இன்னும் யோசிச்சிட்டு இருப்பாங்களோ…
Happenings seems good for “Democracy”….still have to wait on what Delhi people things…. டில்லி சட்டசபை தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம்
Note:
இந்த டில்லி சட்டசபை தேர்தல்News shadowed one small but noticeable information today:
“ஜெயந்தி நடராஜன் இலங்கை அதிபர் தேர்தலில், மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றதும், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, இலங்கைக்கு போயிருக்காங்க… ஏற்கனவே, இலங்கை அமைச்சராக மைத்ரிபால சிறிசேன இருந்த போது, டில்லியில, மரியாதை நிமித்தமா, ஜெயந்தியை சந்திச்சு பேசிய அறிமுகம் இருக்கு… அதனால, இப்ப இலங்கைல இருக்காங்க…- டீ கடை பெஞ்ச் ” -செய்தி நன்றி தினமலர்