மனதைக் கொண்டு மணி மகுடம் கண்டோம்
நாம் உனக்கு…
உன் மணி மகுடம் கீழிறங்கா கனவு
கொண்டோம் சூளுரைத்து !!!
அல்லவை ஓங்கும் நேரம், உன் நினைவு
தடம் மாறும் தருணமிது …
எவரும் கொண்டாடும், “எவ்வழி” வந்தோரும்
என் பொருட்டல்ல.
“இவரே” எனக் கொண்டாடும் உண்மைப்
புகழ் நிலைத்திருக்கும் உணர்வாய் நீ…
உன் செயல் சொல்லும் செய்தி சுற்றம்
பார்க்கச் செய்திருப்பாய்…
சுற்றம் உன்நிலை கொள்ளும், உண்மையல்ல
மண்சரடு மட்டுமிங்கு !!!
தோள் சுமந்து கொண்டாடிய காலமின்னும்
பசுமையாய் நினைவென் நெஞ்சத்தில்
தோள் மீறி வளர்ந்த உன்செயல் யாவும்
பட்டமரம் உணர்வொத்த பகுதிதானின்று…
சிறு கவிதையாய் வாழ்க்கை உண்டு, புகழோடு
வாழப் பலவழியுமுண்டு
வாழ்தலே சில நேரமிங்கு வசந்தமாய்
பரிமளிப்பதுண்டு
மாற்றம் மட்டுமே நிரந்தரம், உண்மையறியா
பேதையல்ல நான் …
நல் மாற்றமிங்கு நிரந்தரமாய் நிலைக்க
பேராற்றலிடம் இறைஞ்சி நான் ….
1 Comment
super